பெரியார் சிலையை உடைத்த மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் சஸ்பெண்டு

புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் செந்தில்குமாரை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர்.
பெரியார் சிலையை உடைத்த மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் சஸ்பெண்டு
Published on

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி பகுதியில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி, சிலையை உடைத்ததாக அப்பகுதியை சேர்ந்தவரும், சத்தீஸ்கரில் மத்திய பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் செந்தில் குமாரை சஸ்பெண்டு செய்து மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அவரது நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர். அதன் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com