

இந்த சீசனில் யுவான்டஸ் அணி தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் யுவான்டஸ் கிளப் இயக்குனர் பராட்டிசி ரொனால்டோ குறித்து கூறுகையில் ‘‘எக்காரணத்தைக் கொண்டும் ரொனால்டோவை விட்டுத்தர மாட்டோம். எங்கள் அணியில் சேர தொடக்கம் முதலே அவர் ஆர்வம் காண்பித்தார். இது சாதகமாக அமைந்தது.
இதற்கிடையே யுவான்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சென்ற உலகக்கோப்பை வெற்றி வீரரான பால் போக்பா மீண்டும் எங்கள் அணிக்கு வரவாய்ப்பில்லை என்றார். ரொனால்டோவை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல’’ என்றார்.