

ஆர்.எஸ்.எஸ். செயற்குழு தலைவர் இந்திரேஷ் குமார் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் நடைபெற்ற ஹிந்து ஜகரான் மன்ச் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சமீபத்தில் இதே மாநிலத்தில் சாமியார் அக்னிவேஷ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பால கருத்து தெரிவித்த இந்திரேஷ் குமார், அவர் தாக்கப்பட்டது தவறானது, கண்டனத்துக்குரியது. ஆனாலும், கருத்து சுதந்திரம் என்னும் பெயரில் பிறரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பேச யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.