புற்றுநோய் சிகிச்சைக்கு பசு கோமியம் - மத்திய மந்திரி தகவல்

புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிறநோய்களுக்கான மருந்து தயாரிப்பில் பசு மாட்டின் கோமியத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மந்திரி குறிப்பிட்டுள்ளார்.
பசு கோமியத்தை சேகரிக்கும் வடமாநிலத்து பெண் (கோப்பு படம்)
பசு கோமியத்தை சேகரிக்கும் வடமாநிலத்து பெண் (கோப்பு படம்)
Published on

நோய்க்கிருமிகளை கொல்வதில் பசு மாட்டின் கோமியத்துக்கு தனிச்சிறப்பு உள்ளதாக இந்திய மக்கள் கருதி வருகின்றனர். குறிப்பாக, பல ஆண்டுகாலமாக காலையில் பசுவின் கோமியத்தால் முகம் கழுவதை ஆன்மிகம்சார்ந்த நற்காரியங்களில் ஒன்றாக இந்து மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிறநோய்களுக்கான மருந்து தயாரிப்பில் பசு மாட்டின் கோமியத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.

பல வேளைகளில் தங்களது நோய் குணமாவதற்காக மக்கள் பசுவின் கோமிடத்தை குடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். நமது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூட இதை வழக்கமாக கொண்டிருந்தார். எனவே, பசுவின் கோமியம் தொடர்பாக அதிகமான ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com