மனைவி தொடர்ந்த செக் மோசடி வழக்கு - கிரிக்கெட் வீரர் ‌ஷமிக்கு சம்மன்

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் செப்டம்பர் 20-ந்தேதி ஆஜராகுமாறு கொல்கத்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. #MohammedShami
மனைவி தொடர்ந்த செக் மோசடி வழக்கு - கிரிக்கெட் வீரர் ‌ஷமிக்கு சம்மன்
Published on

கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி. இவர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் புகார் கூறி இருந்தார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முகமது ‌ஷமி மீது அவர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவாகி இருந்தது.

ஆனால் இந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது இதை தொடர்ந்து அவர் மீது செக் மோசடி வழக்கை அவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் முகமது ‌ஷமிக்கு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

செப்டம்பர் 20-ந்தேதி முகமது ‌ஷமி ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை ஹசின் ஜகானின் வக்கீல் ஜாகீர் உசேன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com