12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் - 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க மும்பை கோர்ட் மறுப்பு

மகாராஷ்டிராவில் 12 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 45 வயது பெண்ணுக்கு ஜாமின் வழங்க மும்பை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #minorboymolested #mumbaiboymolested
12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் - 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க மும்பை கோர்ட் மறுப்பு
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் பாந்த்ரா பகுதியில் உள்ள தாயாரை பார்க்க 12 வயது சிறுவன் கடந்த 5ம் தேதி  தனது உறவினர்களுடன் சென்றான். அங்கு தாயார் இல்லாததால் வீட்டின் வெளியே காத்திருந்தான்.

இதை கவனித்த பக்கத்து வீட்டு பெண்மணி அந்த சிறுவனை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுவன் தந்தையிடம் தெரிவித்தான்.

சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். இந்த வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஜாமின் கிடைக்க வேண்டும் என அந்த பெண் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பெண்மணிக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துவிட்டது. #minorboymolested #mumbaiboymolested

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com