

சென்னை:
தி.மு.க.வை சேர்ந்த தூத்துக்குடி பிரமுகரான ஜோயல் சென்னையில் உள்ள தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் நீர் நிலைகளில் இருந்து ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க 2008-ம் ஆண்டு தடை சட்டம் உள்ளது. இதை மீறி ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஆலைகளுக்கு நீர் எடுக்கப்படுகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய நீதிபதிகள், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஆலைகளுக்கு நீர் எடுக்க தடை விதித்து உத்தர விட்டனர்.