கேரள கன்னியாஸ்திரி விவகாரத்தில் கைதான ஜலந்தர் பிஷப்பின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கேரள மாநிலத்தை சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. #FrancoMulakkal #Judicialcustody
கேரள கன்னியாஸ்திரி விவகாரத்தில் கைதான ஜலந்தர் பிஷப்பின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Published on

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.
 

பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக  பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோ முல்லக்கல் தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் நகரில் உள்ள போப் பிரான்சிஸ் அரண்மனை அதிகாரிகள் அறிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com