நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் உயர் கல்வித்துறை செயலாளர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். #MangatRamSharma #CourtDefamationCase #HighCourt
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் உயர் கல்வித்துறை செயலாளர்
Published on

சென்னை:

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையங்களை வெளிநாடுகளில் திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், உத்தரவை மீறி தொலைதூரக் கல்வி மையங்களை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று 8 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று 7 பேர் ஆஜராகினர். ஆனால், உயர் கல்வித்துறைச் செயலர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை

இதையடுத்து, வழக்கை விசாரித்த ஐகோர்ட், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தமிழக உயர் கல்வித்துறைச் செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைதுசெய்து ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு இருந்தது. 

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அப்போது அவர், நேற்று ஆஜராகாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

இதையடுத்து, மங்கத்ராம் சர்மாவுக்கு எதிராக பிறப்பித்திருந்த ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது வாரண்ட்டை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது. #MangatRamSharma #CourtDefamationCase #HighCourt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com