

2-வது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் பார்சிலோனா வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லூயிஸ் சுவாரஸ் 50-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார். 69-வது நிமிடத்தில் அதிர்ஷ்டம் மூலம் அந்த அணிக்கு மேலும் ஒரு கோல் கிடைத்தது. ரபேல் வரானே ஓன் கோல் அடிக்க பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.