குன்னூர் அருகே தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

குன்னூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

குன்னூர்:

குன்னூர் அருகே கோடமலை பகுதியில் தனியார் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்குள்ள தொழிலாளர்கள் நேற்று எஸ்டேட் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- 

நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பல காலமாக பணியாற்றும் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். தொழிலாளர்களின் குடியிருப்புகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் மழை காலங்களில் சேதம் ஏற்படும் நிலை உள்ளது. என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் வண்டி சோலை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சதிஷ் குமார் தொழிலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகத்திடம் பேசி சுமூக தீர்வு காணுவதாக கூறினார். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com