

இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் மாதம் 26-ம் தேதி ஆண்டுதோறும் அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில், 70-வது அரசியலமைப்பு சட்ட தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்று பேசினார்.
இந்த கூட்டத்தை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்டரிய ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.