தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி நியமித்த இரு நபர்கள் - யாரை சொல்கிறார் மோடி?

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அதற்கு பொறுப்பேற்க அக்கட்சியினர் நியமித்திருக்கும் இருவரின் பெயர்களை பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி நியமித்த இரு நபர்கள் - யாரை சொல்கிறார் மோடி?
Published on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகார் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவ தான் போகிறது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி,  மணி சங்கர் ஐயர் மற்றும் சாம் பிட்ரோடா ஆகிய இரு நபர்களை நியமித்திருக்கிறது. இதில் ஒருவர், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டால், ‘ஆமாம் நடந்து விட்டது, அதற்கென்ன?’ என கேள்வி கேட்கிறார். இவர் தான் குஜராத்தில் தேர்தலின்போது என்னை அவதூறாக பேசினார். இப்போது மீண்டும் என்னை தாக்கி பேசுகிறார்.

இது மட்டுமின்றி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான அரசை நடத்தும் பொறுப்பை தந்துள்ளனர். இதனால் மிகுந்த பெருமைக்குரியவன் ஆகிறேன். உங்கள் காவலாளியான நான் எப்போதும் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவதையே கடமையாக கொண்டுள்ளேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com