

இந்தநிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணி ஆலோசகராக தெண்டுல்கரும் ஐதராபாத் அணி ஆலோசகராக லஷ்மணனும் உள்ளனர். இதனால் இருவரும் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக இருவரும் விளக்கம் அளிக்கும்படி கிரிக்கெட் வாரிய மத்தியஸ்தரும் நெறிமுறைகள் அலுவலருமான டி.கே. ஜெயின் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் இருவரும் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கவில்லை என்று விளக்கம் அளித்தனர்.