சிறுமி கடத்தல் - வாலிபர் மீது புகார்

ஊத்தங்கரை அருகே சிறுமியை கடத்தியதாக வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை பக்கமுள்ள அத்திப்பாடியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். 

இதில் திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்த பூவரசன் (வயது21) என்பவர் தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com