கோபி அருகே கல்லூரி மாணவி திடீர் மரணம்

கோபி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கல்லூரி மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
மாணவி மரணம்
மாணவி மரணம்
Published on

கோபி:

கோபி அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவர் ஜெயசந்தியா (வயது 23). இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்த ஜெயசந்தியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com