குடிநீர் பிரச்சினை குறித்து போனில் புகார் தெரிவிக்கலாம்- கலெக்டர் ராமன் தகவல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக போனில் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
குடிநீர் பிரச்சினை குறித்து போனில் புகார் தெரிவிக்கலாம்- கலெக்டர் ராமன் தகவல்
Published on

வேலூர்:

வேலூர் கலெக்டர் கூட்டரங்கில் குடிநீர் பற்றாக்குறை குறித்து கலெக்டர் ராமன் தலைமையில் சம்மந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

வேலூர் மாவட்ட மக்களுக்கு காவேரிக்கூட்டு குடிநீர் திட்டம் மூலம் விநியோகம் செய்து வலரும் முதன்மை குழாய் பராமரிப்பு பணி மற்றும் மேட்டூர் செக்கானூர் பராமரிப்பும் கடந்த 8-ந்தேதி முதல் 26-ந்தேதிடி வரை 19 நாட்களாக பணி நடைபெற்று வருகிறது.

இந்த பராமரிப்பு பணியின் போதும் வேலூர் மாநராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் தேவையான அளவு சீராக வழங்கப்பட்டு வருகிறது. 26-ந்தேதிக்கு பிறகு வழக்கமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் நீரின் அளவு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

20 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 506 குடிநீர் திட்ட பணிகள் ரூ.1165.28 லட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 353 குடிநீர் பணிகள் தொகை ரூ.760.57 லட்சத்திற்கு முடிக்கப்பட்டுள்ளது. நிலுவை பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலிருந்தும் வழங்கப்படும் குடிநீரானது வறட்சியை கருத்தில் கொண்டு தனிநபருக்கும் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள அளவை மட்டமே வீணாகாமல் பொதுமக்கள் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பிற தேவைகளுக்கு இதர உள்ளூர் குடிநீர் ஆதாரங்களை கொண்டு பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் முறைகேடாக குடிநீரை இதர பயன்பாட்டிற்கு பயன் படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக புகார் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் இயங்கும் 1800-425-4980 என்ற இலவச எண்ணிற்கு புகார்களை தெரிவிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com