பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு விமானப்படையில் வேலை - கலெக்டர் கதிரவன் தகவல்

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படை வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடக்கவுள்ளதாக ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கலெக்டர்
ஈரோடு கலெக்டர்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய விமானப்படையில் எஜூகேசினல் இன்ஸ்டெரக்டர் பணிக்கான ஆட்சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் வரும் 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.

பி.எட் பட்டப்படிப்புடன் இளநிலை பட்டப்படிப்பு முடித்த ஆண்களாக இருக்க வேண்டும். 19-1-1995 முதல் 1-7-2000 தேதிக்குள் பிறந்திருப்பவராக இருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் ஆங்கிலம் அல்லது இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், தகவல் தொடர்பியல், கணினி அறிவியல், புள்ளியியல் அல்லது பி.சி.ஏ பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

பி.எட் பட்டப்படிப்புடன் முதுகலை பட்டிப்படிப்பு படித்தவர்கள் 19-7-1992 முதல் 1-7-2000-ந் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் ஆங்கிலம், உளவியல் அல்லது கணிதம், இயற்பியல், புள்ளியியல், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் அல்லது எம்.சி.ஏ.ஆகிய கல்வித் தகுதியுடன் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 11-ந் தேதி வரை நடக்கிறது. பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை 0424-2275860 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கலெக்டர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com