

பயிற்சியாளர் ஆறுமுகம் சென்னை வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் பேரிடர் மேலாண்மை தொடர்பாக டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் டிப்ளமோ பயிற்சி முடித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
கல்லூரிகளில் இதுபோன்ற பயிற்சிகளை அளிக்கும் போது சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வசதிகளை செய்த பின்னர் தான் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.