எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி

சென்னையில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி
Published on

சென்னை:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அதன் நிறைவு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

சென்னை நந்தனம் ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன் விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாட்டுக் கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் அமைச்சர் ஜெயக்குமாரும் எம் ஜி ஆர் பாடல்களை பாடி பாடகராக அசத்தினார். பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவும் அவருடன் இணைந்து பாட்டுப்பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில், மாலை 4 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் நூற்றாண்டு விழா நிறைவு மேடைக்கு வருகை தந்தனர்.  

மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை முதல்வர் பழனிசாமி வெளியிட துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் அதிக அளவிலான போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com