

சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், ஆழியாளம் கிராமத்தை சேர்ந்த மாதேஸ் இன்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு செல்லும்போது காட்டு யானை தாக்கியதில் உயிர் இழந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிர் இழந்த மாதேஸ் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் வனத்துறை மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami