

தாம்பரம்:
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தினேஷ்செல்வம். இவர் தாம்பரத்தில் தங்கி இருந்து சிறுசேரியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை குரோம்பேட்டை- பல்லாவரம் இடையே தண்டவாளத்தில் தினேஷ்செல்வம் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றினர். தினேஷ்செல்வம் ரெயில் மோதி இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.