குரோம்பேட்டையில் அரசு பஸ் மோதி பெண் பலி

குரோம்பேட்டையில் அரசு பஸ் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரோம்பேட்டையில் அரசு பஸ் மோதி பெண் பலி
Published on

தாம்பரம்:

தாம்பரம் நடுவீரப்பட்டு கிராமம் எட்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி கோமதி. குரோம்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்றார்.

அப்போது கூடுவாஞ்சேரி-வடபழனி மாநகர பஸ் கோமதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் பஸ் டிரைவர் பழனியிடம் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com