சூளைமேட்டில் ரவுடி தினேஷ்குமார் கைது

சூளைமேட்டில் ரவுடி தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளைமேட்டில் ரவுடி தினேஷ்குமார் கைது
Published on

சென்னை:

சென்னை சூளைமேடு போலீசார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி தினேஷ்குமார் தனது நண்பரை பார்க்க சூளைமேடு பகுதிக்கு வந்தார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் தினேஷ்குமார் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

தி.மு.க. கவுன்சிலர் கோபி, மயிலாப்பூரை சேர்ந்த ரவுடி மகேஷ் ஆகிய 2 பேரை கொலை செய்த வழக்கு ரவுடி தினேஷ்குமார் மீது உள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளும் அவர் மீது உள்ளன. அது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com