சோழவரம் அருகே கொள்ளையர்கள் 5 பேர் கைது

சோழவரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள், உருட்டுக் கட்டைகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சோழவரம் அருகே கொள்ளையர்கள் 5 பேர் கைது
Published on

பொன்னேரி:

சோழவரத்தை அடுத்த எடப்பாளையம், பழைய விமான நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை கண்டதும் சாலையோரத்தில் பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் சென்னையை சேர்ந்த சிவா, தினேஷ், ஆனந்த் குமார், விஜயகுமார், விஜய் என்பது தெரிய வந்தது.

சாலையில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கூட்டு கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள், உருட்டுக் கட்டைகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com