விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை- சோழவரம், மாதவரத்தில் 12 செமீ

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. #TNRains #NEMonsoon
விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை- சோழவரம், மாதவரத்தில் 12 செமீ
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் மற்றும் கனமழையால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்,  தற்போது தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com