2 வயதில் கடத்தப்பட்டவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெற்றோருடன் இணைந்தார்

சீனாவில் 2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பெற்றோருடன் இணைந்த தருணம்
பெற்றோருடன் இணைந்த தருணம்
Published on

சீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த தம்பதி மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி. இவர்களின் மகன் மாவோ யின். கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி மாவோ ஜென்ஜிங் தனது 2 வயது மகன் மாவோ யின்னை வீட்டில் இருந்து மழலையர் பள்ளிக்கு அழைத்து சென்றார்.

செல்லும் வழியில் மாவோ யின் தனக்கு தாகமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து, மாவோ ஜென்ஜிங் அவனை அருகில் இருந்த ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அப்போது மாவோயின் திடீரென மாயமானான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. பின்னர் அவன் குழந்தை கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டது தெரியவந்தது.

கடந்த 2007-ம் ஆண்டு ‘குழந்தையே வீட்டுக்கு திரும்பி வா’ என்கிற பெயரில் லி ஜிங்ஷி தன்னார்வ தொண்டு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மகனை தேடினார். இந்த அமைப்பின் மூலம் குடும்பத்தை பிரிந்த 29 சிறுவர்கள் தங்களின் குடும்பத்துடன் இணைந்தனர். ஆனால் லி ஜிங்ஷிங்குக்கு தனது மகன் கிடைக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com