

ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, ‘நெடுங்காலமாக கிடப்பில் இருக்கும் காஷ்மீர் விவகாரம் தொடர்பான வில்லங்கங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள விதிமுறைகளின்படி அமைதியான வகையில் தீர்க்கப்பட வேண்டும்.
இந்நிலையில், இதுதொடர்பாக சீனாவுக்கு இன்று பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் சட்டவிரோதமாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் அமைப்பது ஆகிய முயற்சிகளை தவிர்த்து, இந்தியாவின் எல்லைக்குட்பட்ட விவகாரங்கள் மற்றும் எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு மற்ற நாடுகள் மதிப்பளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.