குழந்தை கொலையில் திருப்பம் - நரபலி கொடுத்த பெண் மந்திரவாதி கைது

புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டியில் 3 வயது குழந்தை கொலை வழக்கில், பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #HumanSacrifice
குழந்தை கொலையில் திருப்பம் - நரபலி கொடுத்த பெண் மந்திரவாதி கைது
Published on

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலித்தொழிலாளி. இவரது மகள் ஷாலினி (வயது 3) கடந்த மாதம் 26-ம் தேதி மாலை விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவள் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் ஷாலினி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதி கிராம எல்லை காட்டுப் பகுதியில் ஷாலினி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஷாலினி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com