குழந்தைகள் மையங்களை பதிவு செய்ய வேண்டும் - மாநில அரசுகளுக்கு மேனகா காந்தி உத்தரவு

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று உத்தரவிட்டார். #ChildCare #Registered #ManekaGandhi
குழந்தைகள் மையங்களை பதிவு செய்ய வேண்டும் - மாநில அரசுகளுக்கு மேனகா காந்தி உத்தரவு
Published on

புதுடெல்லி:

அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ நிறுவனம், ஜார்கண்ட் மாநிலத்தில் நடத்தி வரும் குழந்தைகள் மையம், தத்தெடுப்பு என்ற பெயரில் 3 குழந்தைகளை பணத்துக்கு விற்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று உத்தரவிட்டார்.

அத்துடன், குழந்தைகள் தத்தெடுப்புக்கென தேசிய அளவில் செயல்படும் உயரிய அமைப்பான ‘காரா’வில் அனைத்து மையங்களும் ஒரு மாதத்துக்குள் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com