

மாங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் கீரை வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் வியாபாரியின் மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படியும் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.
இதையடுத்து அந்த பெண் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்த டாக்டர்கள் 2 யுனிட் ரத்தம் ஏற்றி இருக்கிறார்கள். தொடர்ந்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியிலேயே மாதம் தோறும் மருத்துவ பரிசோதனை செய்து வந்திருக்கிறார்.
9-வது மாதம் நிறைவடைந்து கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதி குழந்தை பெற்று இருக்கிறார்.
எச்.ஐ.வி. பாதிப்பால் மனம் உடைந்த அந்த பெண் தனக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் எச்.ஐ.வி. இருந்ததாக தெரிவித்து சுகாதார துறைக்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார்.
ஆனால் அது பற்றி யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக வெளியே சொல்ல பயந்து இருந்த அந்த பெண் சாத்தூர் சம்பவத்தை தொடர்ந்து தனக்கும் அந்த மாதிரி கொடுமை நிகழ்ந்தது என்று இன்று கண்ணீருடன் தெரிவித்தார்.