இந்தியாவிலேயே சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கிடைத்துள்ள தனிச்சிறப்பு தெரியுமா?

சுமார் 150 ஆண்டுகால பழமைவாய்ந்த சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது. #chennaicentral
இந்தியாவிலேயே சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கிடைத்துள்ள தனிச்சிறப்பு தெரியுமா?
Published on

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, வெளியூர்களில் இருந்து சென்னை வரும் ரெயில் பயணிகளின் டிக்கெட்டுகளில் முன்னர் சென்னை சென்ட்ரல் என இருந்த பெயர் மாற்றப்பட்டு, ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலத்திலும் Puratchi Thalaivar Dr MGR Central railway station என அச்சிடப்பட்டுள்ளது. இதேபோல், சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் முகப்பு வாயிலின் உச்சியில் உள்ள பெயர் பலகை, ரெயில் நிலையத்தின் நடைமேடைகளில் உள்ள அறிவிப்பு பலகைகள் யாவும்  ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கணிப்பொறியில் காணக்கிடைக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பிடியாவிலும் ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது.

நாட்டிலேயே மிக நீளமான பெயர் கொண்ட ரெயில் நிலையமாக அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் உள்ள ’வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ (Venkatanarasimharajuvaripeta) என்ற ரெயில் நிலையம் முன்னர் அறியப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com