

கனமழைக் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரபாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் ‘செம்பரபாக்கம் உள்பட பல ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள். தங்களுடைய பொருட்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதை நம்பும் வகையில் மின்சார வாரியம் சுமார் 112 இடங்களில் மின்சாரத்தையும் துண்டித்தது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.