

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), என்.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடைபெறும் நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ. அட்வான்ஸ்டு) கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்றது. அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளில் மிக கடினமான தேர்வு என கருதப்படும் இந்த தேர்வை நாடு முழுவதும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 540 பேர் எழுதினார்கள்.