சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - மந்திரி சபை கூட்டத்தில் முடிவு

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
சாலையோர வியாபாரி
சாலையோர வியாபாரி
Published on

புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் சிறு, குறு தொழில் மற்றும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு கடன்கள் வழங்குவது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அப்போது சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்க மந்திரி சபை  கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அந்த 10 ஆயிரம் ரூபாய் கடனை மாதத்தவணைகளின் அடிப்படையில் ஓராண்டுக்குள் சாலையோர வியாபாரிகள் திருப்பி செலுத்தும் வகையிலான திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் நெல், உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி வகைகள் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையையும் மத்திய அரசு நேற்று முடிவு செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com