சி.பி.ஐ. சோதனை எதிரொலி: கார்த்தி சிதம்பரம் வீட்டில் கட்சியினர் குவிந்தனர்

காரைக்குடியில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை எதிரொலி, காங்கிரஸ் கட்சியினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சி.பி.ஐ. சோதனை எதிரொலி: கார்த்தி சிதம்பரம் வீட்டில் கட்சியினர் குவிந்தனர்
Published on

காரைக்குடி:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் ஆகும். இங்கு பூர்வீக வீடு உள்ளது. இந்த வீடு அவரது உறவினர் பராமரிப்பில் உள்ளது.

இதுதவிர காரைக்குடியை அடுத்த மானகிரியில் சுமார் 90 ஏக்கர் நிலப்பரப்பில் கார்த்தி ப.சிதம்பரத்துக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. சிவகங்கை வரும்போது இந்த வீட்டில் தான் சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவது வழக்கம்.

இன்று காலை சென்னையில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் காரைக்குடி மானகிரியில் உள்ள வீட்டிலும் சோதனை நடக்கலாம் என்ற தகவல் பரவியது.

இதையடுத்து காங்கிரசார் அங்கு விரைந்தனர். ஆனால் அங்கு காலை 9 மணிவரை அதிகாரிகள் யாரும் சோதனைக்கு வரவில்லை. வீடும் பூட்டப்பட்டே இருந்தது.

இதேபோல் கண்டனூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும் சாதனை நடைபெறவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com