பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர். #PollachiCase #CBCID #EnquiryReport
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை  - சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்
Published on

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து கொடூரங்களை நிகழ்த்தினர்.
 

இதுதொடர்பாக  சபரிராஜன் (25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com