காவிரி நீர் தீர்ப்பு எதிரொலி - பெங்களூரு செல்லும் பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்

காவிரி நீர் தீர்ப்பு எதிரொலியாக தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று இரவு 11 மணி முதல் ஓசூரில் நிறுத்தப்பட்டன.
காவிரி நீர் தீர்ப்பு எதிரொலி - பெங்களூரு செல்லும் பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்
Published on

ஓசூர்:

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, நாகர்கோவில், நெல்லை, செங்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, விழுப்புரம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெங்களூரூ சென்ற பஸ்கள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தப்பட்டன.

இதபோல சேலம், ஓசூரில் இருந்து மைசூருக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை நேற்று இரவு பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு கர்நாடக மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று காலை முதல் அந்த பஸ்களும் நிறுத்தப்பட்டன.

பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வரும் கர்நாடக மாநில பஸ்கள் அந்த மாநில எல்லையான அத்திப்பள்ளி வரையே இயக்கப்படுகிறது. அந்த பஸ்களில் இருந்து இறங்கும் பயணிகள் நடந்து தமிழக எல்லைக்குள் வருகின்றனர். அங்கிருந்து ஆட்டோ, கார், மற்றும் டவுன் பஸ்கள் மூலம் ஓசூருக்கு வருகின்றனர்.

இதேபோல ஓசூர் - பெங்களூரு இடையே தமிழக அரசு பஸ்கள் மட்டும் அல்ல, தனியார் பஸ்களும் ஓடவில்லை. தமிழக - கர்நாடக எல்லைகளில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் ஓடும் தமிழக அரசு லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் ஆங்காங்கே பாதுகாப்பாக றிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல தமிழகத்தில் இருந்து சென்ற ஆம்னி பஸ்களும் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணை உள்ளிட்ட முக்கிய அணைகளிலும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com