அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் ஊராட்சி செயலாளர் மீது வழக்கு

அதிமுக பிரமுகரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி செயலாளர் மீது போலீசார் வழக்கு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் ஊராட்சி செயலாளர் மீது வழக்கு
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (42). ஊராட்சி செயலாளர். இவர் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இதற்கு காரணம் அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் முத்துமாணிக்கம் தான் என கருதிய சந்திரசேகரன் அவரது வீட்டிற்கு சென்று முத்து மாணிக்கத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com