விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- 2 பேர் பலி

விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து
விபத்து
Published on

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல் மகன் மரிய வின்சென்ட்(வயது 20). இவர் சேப்ளாநத்தத்தில் உள்ள விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ் மகன் அந்தோணிராஜ் (24) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

புதுக்கூரைப்பேட்டை அருகே சென்ற போது பின்னால் வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வின்சென்ட், அந்தோணி ராஜ் இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com