அதியமான்கோட்டை அருகே சொகுசு கார்-கண்டெய்னர் லாரி மோதல்- ஒருவர் பலி

அதியமான்கோட்டை அருகே கண்டெய்னர் லாரி மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதியமான்கோட்டை அருகே சொகுசு கார்-கண்டெய்னர் லாரி மோதல்- ஒருவர் பலி
Published on

தருமபுரி:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு சொகுசு காரை 40 வயது மதிக்கத்தக்கவர் ஓட்டி வந்தார். இந்த கார் இன்று பகலில் அதியமான்கோட்டை அருகே புறவடை பகுதியில் உள்ள தொப்பூர் - கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் வந்தபோது முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. 

இதில் காரை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. 

காரின் பதிவு எண்ணை கொண்டு அவரை அடையாளம் கண்டுபிடிக்க அதியமான்கோட்டை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com