

காரமடை:
கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 23). பி.இ. பட்டதாரி. சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார்.
இவர் தனது நண்பர்கள் கவுசிகன், பிரதீப், சஞ்ஜய் ஆகியோருடன் கோவையில் இருந்து கல்லாறு நோக்கி காரில் சென்றனர். அப்போது கார் கரியம்பாளையம் காரமடை இடையே எம்.ஜி.ஆர் நகர் அருகில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மனோஜ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மனோஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.