தமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு

நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். #WaterCan #DrinkingWater
தமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு
Published on

சென்னை:

நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிமவள பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். 4000-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் ஓடவில்லை.

இந்நிலையில் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் இன்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்தப் போவதாக கூறியுள்ளனர். 

இதுபற்றி கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட  குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி கூறுகையில், நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை எதிர்த்து இன்று மாலை முதல் கேன் குடிநீர் உற்பத்திய நிறுத்த உள்ளதாக தெரிவித்தார். #WaterCan #DrinkingWater

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com