

விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைப்பதை எதிர்த்து வங்கிப் பணியாளர்களின் 9 சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. எனினும், இந்த இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.
இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.