

நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
வசந்தகுமாரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால் இதுகுறித்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு முறைப்படி தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் நாங்குனேரி தொகுதி காலி தொகுதியாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டாலும் தேர்தல் கமிஷன் விதிப்படி 6 மாதத்துக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் ஆகஸ்டு மாதம் நாங்குனேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.