வருகை குறைவால் பயணிகளுக்காக பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பஸ்கள்

ஜெயங்கொண்டத்தில் வருகை குறைவால் பயணிகளுக்காக பஸ் நிலையத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் பயணிகளின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 22 புறநகர பஸ்கள், 7 நகர பஸ்கள் கடந்த 1-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாகவே டிரைவர்கள், கண்டக்டர்கள் பயணிகளின் வருகைக்காக காத்திருக்கின்றனர். 

மேலும் பயணிகள் வருகை குறைவாக இருப்பதால் பஸ்களை அரைமணி நேரம், ஒரு மணி நேரம் என பயணிகள் வருகைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு, பயணிகள் வந்த பின்னர் அவர்களுக்கு கைகளில் கிருமி நாசினி கொடுத்து சுத்தம் செய்து, முக கவசம் அணிய செய்து பஸ்களில் ஏறச்செய்து வருகின்றனர். 

இருப்பினும் பஸ்களில் போதிய பயணிகள் இல்லாமல் சில பஸ்களில் 5 முதல் 8 பேர் வரையும், சில பஸ்களில் 10 முதல் 15 பேர் வரையும் என குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வருமான இழப்பும், டீசல் செலவும் ஏற்படுவதாக டிரைவர்களும், கண்டக்டர்களும் கூறுகின்றனர். வருகிற 7-ந் தேதி முதல் மாவட்டங்கள் இடையே பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மற்ற மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டால், அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com