பஸ்சில் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது

திருச்சியில் ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்களை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பஸ்சில் பிக்பாக்கெட் அடித்த  2 பெண்கள் கைது
Published on

திருச்சி:

திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர்  குமுதம் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). இவர் திருச்சி மத்திய பேருந்து  நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்கு பேருந்தில் சென்றார். பஸ் காஜாமலை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவரின் அருகில் இருந்த 2 பெண்கள், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்சை எடுத்துள்ளனர். 

இதனை கவனித்த அவர் சக பயணிகள் உதவியுடன் இரு பெண்களையும் பிடித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில்  ஒப்படைத்தார். 

விசாரணையில் அவர்கள் இருவரும்  மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஜீவா (50), முத்து மனைவி சுபிதா ( 37) என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com