விபத்து
விபத்து

சூனாம்பேடு அருகே பைக் மீது பஸ் மோதல்- 2 வாலிபர்கள் பலி

சூனாம்பேடு அடுத்த கொளத்தூர் சோதனை சாவடி அருகே பைக் மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on

மதுராந்தகம்:

கடலூர் மாவட்டம் தச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது28). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் ஒருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இன்று காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். சூனாம்பேடு அடுத்த கொளத்தூர் சோதனை சாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது எதிரே பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற சொகுசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ்குமாரும் அவரது நண்பரும் பலியானார்கள்.

இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com