

பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளந்தமிழன் (வயது 16). அதே கிராமத்தை சேர்ந்தவர் பாலா (16). இவர்கள் 2 பேரும் பேராவூரணி அடுத்த ஆவணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தனர்.
இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோட்டார் சைக்கள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் நடுரோட்டில் விழுந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த பஸ் எதிர்பாராதவிதமாக கீழே கிடந்த இளந்தமிழன் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இளந்தமிழன் பரிதாபமாக இறந்தார். பாலா பலத்த காயம் அடைந்தார்.