

சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் 5 அடுக்குமாடிகள் கொண்ட பழைய கட்டிடம் உள்ளது. இன்று இரவு திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டது.